அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 3 அக்டோபர், 2012

மாலக்க சுற்றுலாவுக்காகவே வெளிநாடு செல்கிறார்


மாலக்க சுற்றுலாவுக்காகவே வெளிநாடு செல்கிறார்

அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக்க சில்வா உயர் கல்விக்காக ஐக்கிய அமெரிக்காவுக்குச் செல்லவில்லையெனக் கூறி மாலக சில்வாவின் வழக்குரைஞர் ஜயந்த வீரசேகர கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த வழக்கு விசாரணையின்போது மாலக சில்வா உயர் கல்விக்காக வெளிநாடு செல்வதாக தவறுதலாக நீதிமன்றத்தில் வழக்குரைஞர்களால் தெரிவிக்கப்பட்டது. இவர் உண்மையில் சுற்றுலாவுக்காகவே வெளிநாடு செல்கின்றாரென வழக்குரைஞர் கூறினார்.

ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 10ஆம் திகதிவரை  மாலக்க சில்வா நாட்டை விட்டுச் செல்வதற்கு வழக்குரைஞர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் வழக்குரைஞர் இன்று கேட்டுக்கொண்டபடி ஒக்டோபர் 10ஆம் திகதி  முதல் நவம்பர் 20ஆம் திகதிவரை நாட்டைவிட்டுச் செல்வதற்கு மாலக்க சில்வாவுக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.  (லக்மால் சூரியகொட)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter