அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 3 அக்டோபர், 2012

எரிபொருள் விலைக் குறைப்பு இல்லையாயின் வேலைநிறுத்தம்: தனியார் பஸ் உரிமையாளர்


எரிபொருள் விலைக் குறைப்பு இல்லையாயின் வேலைநிறுத்தம்: தனியார் பஸ் உரிமையாளர்

(ஒலிந்தி ஜயசுந்தர)

லங்கா இந்தியன் ஒயில் கம்பனி, டீசலின் விலையை லீற்றரக்கு 4 ரூபாவால் அதிகரித்ததன் பின், மேல்மாகான தனியார் பஸ் உரிமையாளர்கள் எரிபொருளின் விலைகள் குறைக்கப்பட்டு தமது ஏனைய கோரிக்கைகள் ஏற்கப்படாதுவிடின் தாம் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக குறிப்பிட்டனர்.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது விடின், எதிர்வரும் 30ஆம் திகதி மேல் மாகாணத்தில் சேவையிலுள்ள பஸ்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமென தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கூறியது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் டீசலின் விலையை அதிகரிக்கப்போவதாக அறிவித்துள்ளதாகவும் எனவே, தனியார் பஸ்களுக்கு டீசல் மானியம் வழங்கப்பட வேண்டுமெனவும் அச்சங்கம் குறிப்பிட்டது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter