படையினரை இந்தியாவில் பயிற்றுவதில் இலங்கை உறுதியாக உள்ளது: பசில்
'அண்மையில் இலங்கை பிரஜைகள் தமிழ்நாட்டில் தாக்கப்பட்டதால் உணர்வுகள் பாதிக்கட்டாலும் யாரும் இந்தியா மீதோ, இந்திய மக்கள் மீதோ வெறுப்பு கொள்ளவில்லை' என அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய ஊடகவியலாளர்களிடம் பேசும் போது கூறியுள்ளார்.
இந்தியாவில் படையினரை பயிற்றுவிப்பதை இலங்கை மீள்பரிசீலனை செய்யவுள்ளது எனவும் அவர்களை சீனா போன்ற நாடுகளுக்கு அனுப்பும் சாத்தியம் உள்ளதா எனவும் கேட்கப்பட்ட போதே அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'பாதுகாப்பு செயலாளர் முதல்; இராணுவ தளபதிகள் வரை ஒவ்வொருவரும் இந்தியாவில் பயிற்றப்பட்டுள்ளனர். சகலரும் முதலில் இந்தியாவுக்கு செல்வர். அதன்பின்னரே அவர்கள் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பயிற்சிக்காக செல்வர்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக