நாட்டின் பல பாகங்களிலும் இரவு வேளைகளில் அவாதானிக்கப்பட்டதாக பொது மக்களால் கூறப்படும் ஒளிப்பிழம்பு அனேகமாக ஒரு கோளாக இருக்கலாம் என விமானப்படைப் பேச்சாளர் விங்கொமாண்டர் சிராஜ் ஜலால்தீன் விடிவெள்ளியிடம் தெரிவித்தார்.
வடமத்திய மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் பொதுமக்களால் அவதானிக்கப்பட்ட ஒளிப்பிழம்பு தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் விங் கொமாண்டர் சிராஜ் மேலும் தெரிவித்ததாவது,
இதுவரையில் குறித்த ஒளிப்பிழம்பினை விமானப்படையினர் காணவில்லை. எனினும் அவ்வொளிப்பிழம்பைக் கண்டுபிடிக்கும் பொருட்டு நாட்டின் வான்பரப்பை 24 மணிநேரமும் கண்காணிக்கும் விஷேட திட்டமொன்றினை விமானப்படையினர் தற்போது நடைமுறைப் படுத்தி வருகின்றனர். அதன்படி 24 மணிநேரமும் நாட்டின் வான்பரப்பு முழுமையாக அவதானிக்கப்படுகிறது.
கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விசேட குழுவொன்று இது தொடர்பில் ஆராய்ந்து வருவருகிறது.அனேகமாக இதுவொரு கோளாக இருக்குமென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒளிப்பிழம்பொன்று மட்டும் தென்படுவதால் அது விமானப்படையின் ராடர் கருவிகளில் பதிவாகக் கூடிய வாய்ப்புக்கள் மிகக் குறைவானதாகும். அத்துடன் இது தொடர்பில் விமானப்படையினர் அவாதினித்து வரும் நிலையில் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என அவர் தெரிவித்தமைக் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் விங் கொமாண்டர் சிராஜ் மேலும் தெரிவித்ததாவது,
இதுவரையில் குறித்த ஒளிப்பிழம்பினை விமானப்படையினர் காணவில்லை. எனினும் அவ்வொளிப்பிழம்பைக் கண்டுபிடிக்கும் பொருட்டு நாட்டின் வான்பரப்பை 24 மணிநேரமும் கண்காணிக்கும் விஷேட திட்டமொன்றினை விமானப்படையினர் தற்போது நடைமுறைப் படுத்தி வருகின்றனர். அதன்படி 24 மணிநேரமும் நாட்டின் வான்பரப்பு முழுமையாக அவதானிக்கப்படுகிறது.
கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விசேட குழுவொன்று இது தொடர்பில் ஆராய்ந்து வருவருகிறது.அனேகமாக இதுவொரு கோளாக இருக்குமென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒளிப்பிழம்பொன்று மட்டும் தென்படுவதால் அது விமானப்படையின் ராடர் கருவிகளில் பதிவாகக் கூடிய வாய்ப்புக்கள் மிகக் குறைவானதாகும். அத்துடன் இது தொடர்பில் விமானப்படையினர் அவாதினித்து வரும் நிலையில் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என அவர் தெரிவித்தமைக் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக