அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 13 டிசம்பர், 2012

சிறுபான்மை மக்களின் அரசியல் உரிமைகளை பாதுகாப்பதற்கு ஏனைய தரப்புகளுடன் இணைந்து செயற்பட மு.கா. தயார்



அரசியல் அமைப்பிலிருந்து 13ஆவது திருத்த சட்டத்தை இரத்துச் செய்ய அனுமதிக்க முடியாது. இதற்கான ஆளும்கட்சியின் குறிப்பிட்ட சிலரின் முயற்சிகளைக் கண்டித்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி முதலில் கண்டித்தது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான். எனவே தொடர்ந்தும் சிறுபான்மை இன மக்களின் அரசியல் உரிமைகளை பாதுகாக்க ஏனைய தரப்புகளுடன் இணைந்து செயற்படத் தயாராகவே உள்ளோம் என முஸ்லிம் காங்கிரஸின் எம்.பி. ஹசன் அலி தெரிவித்தார்.


ஆளும்கட்சியின் 31 உறுப்பினர்களும் கைச்சாத்திட்ட மகஜரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கையெழுத்திட்டு 13 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்வதற்கான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு இவ்வாறான விடயங்கள் தொடர்பில் மௌனமாக இருக்கும் போது சிறுபான்மைச் சமூகமாக முஸ்லிம் காங்கிரஸை தவறாக நினைத்து விடுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter