சிறுபான்மை மக்களின் அரசியல் உரிமைகளை பாதுகாப்பதற்கு ஏனைய தரப்புகளுடன் இணைந்து செயற்பட மு.கா. தயார்
அரசியல் அமைப்பிலிருந்து 13ஆவது திருத்த சட்டத்தை இரத்துச் செய்ய அனுமதிக்க முடியாது. இதற்கான ஆளும்கட்சியின் குறிப்பிட்ட சிலரின் முயற்சிகளைக் கண்டித்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி முதலில் கண்டித்தது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான். எனவே தொடர்ந்தும் சிறுபான்மை இன மக்களின் அரசியல் உரிமைகளை பாதுகாக்க ஏனைய தரப்புகளுடன் இணைந்து செயற்படத் தயாராகவே உள்ளோம் என முஸ்லிம் காங்கிரஸின் எம்.பி. ஹசன் அலி தெரிவித்தார்.
ஆளும்கட்சியின் 31 உறுப்பினர்களும் கைச்சாத்திட்ட மகஜரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கையெழுத்திட்டு 13 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்வதற்கான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு இவ்வாறான விடயங்கள் தொடர்பில் மௌனமாக இருக்கும் போது சிறுபான்மைச் சமூகமாக முஸ்லிம் காங்கிரஸை தவறாக நினைத்து விடுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக