கண்டி - குண்டசாலை விவசாய கல்லூரியில் முஸ்லிம் மாணவர்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் கொடுக்காது சாப்பாட்டுடன் பன்றி இறைச்சி வழங்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயிலும் இவ்விவசாயக் கல்லூரியில் பன்றி இறைச்சி சமைத்துக் கொடுக்கப்படுவதானது முஸ்லிம் மாணவர்களிடத்தில் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.
சாப்பாட்டுடன் தமக்கு பன்றி இறைச்சி வழங்கப்பட்ட விவகாரத்தை முஸ்லிம் மாணவர்கள் கல்லூரி முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது, அதற்கு அலட்சியமாக பதில் வழங்கியுள்ளார் கல்லூரி முதல்வர்.
பன்றி இறைச்சி சமைக்கப்பட்ட காலங்களில் முஸ்லிம் மாணவர்கள் பன்றி கறி சாப்பிடுமாறும், இல்லாதவிடத்து வெளியே சென்று சாப்பிட்டுக் கொள்ளுமாறும் கல்லூரி முதல்வரால் உத்தரவிடப்பட்டுள்ளது.
இருந்தபோதும் முஸ்லிம் மாணவர்கள் கல்லூரி முதல்வருக்கு தொடர்ந்தும் பன்றி கறி தொடர்பில் முறைப்பாடு செய்யவே, அங்கு பன்றி இறைச்சி சமைப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பன்றி இறைச்சி கறி வெளியிலிருந்து தருவிக்கப்படுகிறது.
இவ்வருடம் கல்லூரி உணவுக்காக ஒதுக்கப்பட்ட நிதித் தொகையில் பன்றி இறைச்சிக்கு அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளத்தாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்தாக அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
-Madawala News-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக