இராணுவத்தில் இணைந்த தமிழ்ப்பெண்களில் 16 பேர் வைத்தியசாலையில்
அண்மையில் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ்ப் பெண்களில் 16 பேர் திடீர் சுகயீனம் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பெண்கள் நேற்று முன்தினம் இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து பெண்களின் பெற்றோர் மூலம்தான் தகவல் அறிந்துகொண்டதாகவும் அதன்படி நேற்று பகல் அவர்களை பார்வையிட கிளிநொச்சி வைத்தியசாலைக்குச் சென்ற போது வைத்தியசாலைக்குள் தன்னை அனுமதிக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்கள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் அவர்களை பார்வையிட தன்னை அனுமதிக்காமை வருத்தமளிப்பதாகவும் சிறிதரன் எம்.பி. தெரிவித்தார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக