அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 9 நவம்பர், 2012

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி பேச வேண்டுமாம்: செல்வராசா எம்.பி.

2013ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தினை  நாடாளுமன்றில் நேற்று சமர்ப்பித்த நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, தேநீர் இடைவேளையின்போது உரையாடுகையில் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச வேண்டும் என தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா மேலும் கூறுகையில்...

நாடாளுமன்றத்தில் தேநீர் இடைவேளையின்போது பீலிக்ஸ் பெரேரா, சுமந்திரன், சம்பந்தன் ஆகியோருடன் நானும் உரையாடிக் கொண்டிருந்தேன். அச்சமயம், அவ்விடத்திற்கு வந்த ஜனாதிபதி - நீதித்துறை பற்றிய சில விடயங்களை கூறியதோடு, உங்களுடன் நான் ஆறுதலாக உரையாடவேண்டும், அதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார்.

எது சம்பந்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி பேசவுள்ளார் என்பது பற்றி தெரியவில்லை. ஆனால், எம்முடன் பேசவேண்டும் என்று குறிப்பிட்டமை முக்கியமான விடயமாகும் என்று குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter