ஒலுவில் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அக்கரைப்பற்றிலிருந்து கல்முனை நோக்கி வந்த கன்டர் வாகனமும் கல்முனையிலிருந்து அக்கரைப்பற்றினை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் இன்று வியாழக்கிழமை இரவு ஏழு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளைச் செலுத்தி சென்ற கல்முனைக்குடியைச் சேர்ந்த செய்னுலாப்தீன் அப்துல் கபார் (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளார்.
அதேவேளை மின்சாரக் கம்பத்தில் கன்டர் வாகனம் மோதியதால் அந்த மின் கம்பம் உடைந்து விழுந்துள்ளது.
இதனால் அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

(ஹனீக் அஹமட்,எஸ்.மாறன்)
ஒலுவில் பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை மாலை 6.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் நபரொருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அக்கரைப்பற்றிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற கன்டர் ரக வாகனமும், கல்முனையிலிருந்து அக்கரைப்பற்றினை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.
விபத்தில் - மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த 55 வயதுடைய செய்னுலாப்தீன் அப்துல் கபார் என்பவரே பலியாகியுள்ளார். கல்முனையைச் சேந்த இவர் 05 பிள்ளைகளின் தந்தையாவார்.
இந்த விபத்தின் காரணமாக கட்டுப்பாட்டினை இழந்த கன்டர் வாகனம் அருகிலிருந்த மின்சாரக் கம்பத்துடன் மோதியதால் சாரதி கடுமையான காயங்களுக்குள்ளானதோடு, வாகனமும் சேதத்துக்குள்ளானது. பாலமுனைப் பிரதேசத்தைச் சேர்ந்த வாகனத்தின் சாரதி தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மின்சாரக் கம்பத்தில் கன்டர் வாகனம் மோதியதையடுத்து – கம்பம் உடைந்து விழுந்ததால், அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை உள்ளிட்ட பகுதிகளில் இரவு 8.00 மணிவரை மின் விநியோகம் தடைப்பட்டிருந்தது.
இந்த நிலையில், விபத்தில் மரணமானவரின் பிரேதம் பாலமுனை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ் விபத்துத் தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்றுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



ஒலுவில் விபத்தில் ஒருவர் பலி
(ஹனீக் அஹமட்,எஸ்.மாறன்)
ஒலுவில் பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை மாலை 6.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் நபரொருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அக்கரைப்பற்றிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற கன்டர் ரக வாகனமும், கல்முனையிலிருந்து அக்கரைப்பற்றினை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.
விபத்தில் - மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த 55 வயதுடைய செய்னுலாப்தீன் அப்துல் கபார் என்பவரே பலியாகியுள்ளார். கல்முனையைச் சேந்த இவர் 05 பிள்ளைகளின் தந்தையாவார்.
இந்த விபத்தின் காரணமாக கட்டுப்பாட்டினை இழந்த கன்டர் வாகனம் அருகிலிருந்த மின்சாரக் கம்பத்துடன் மோதியதால் சாரதி கடுமையான காயங்களுக்குள்ளானதோடு, வாகனமும் சேதத்துக்குள்ளானது. பாலமுனைப் பிரதேசத்தைச் சேர்ந்த வாகனத்தின் சாரதி தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மின்சாரக் கம்பத்தில் கன்டர் வாகனம் மோதியதையடுத்து – கம்பம் உடைந்து விழுந்ததால், அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை உள்ளிட்ட பகுதிகளில் இரவு 8.00 மணிவரை மின் விநியோகம் தடைப்பட்டிருந்தது.
இந்த நிலையில், விபத்தில் மரணமானவரின் பிரேதம் பாலமுனை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ் விபத்துத் தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்றுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக