அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 27 நவம்பர், 2012

நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்திற்கு இரண்டு மாடிக்கட்டிடம் (படங்கள்)


(சுலைமான் றாபி)

கிழக்கு மாகாண ஆளுநர் மொகான் விஜேவிக்கிரம அனுசரணையுடன் நிந்தவூர் பிரதேச சபையின் எதிர்கட்சித்தலைவர் YL சுலைமா லெப்பை   முயற்சியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இமாம் கஸ்ஸாலி வித்தியாலயதிற்கான   இரண்டு மாடி கட்டிடம்  (26-11-2012) திங்கட்கிழமை கிழக்கு மாகாண கல்வி, கலாச்சார  பண்பாட்டலுவல்கள் காணி, காணி அபிவிருத்தி போக்குவரத்து அமைச்சின் செயலாளர் NAA புஸ்பகுமாரனால் திறந்து வைக்கப்பட்டது. 

பாடசாலை அதிபர் MMA கபூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் அல் ஹாஜ் MTA தௌபீக், சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர்  AM மன்சூர், நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி SLM சலீம் ஆகியோர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இந்நிகழ்வில்  பாடசாலை ஆசிரிய ஆசிரியைகள், மாணவ   மாணவிகள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர். கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்   NAA புஸ்பகுமார க்கு பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். 

இந்நிகழ்வில் சிறப்பம்சமாக செயலாளர் அவர்களுக்கு நிந்தவூர் பிரதேச சபையின் எதிர்கட்சித்தலைவர் YL சுலைமா லெப்பே விஷேட ஞாபக சினத்தினை வழங்கி கௌரவித்தார். 




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter