இலங்கையின் முதலாவது செய்மதியான சுப்ரீம் செட்-1 (Supreme Sat - 1)ஐ இன்று விண்ணிற்கு ஏவுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சீனாவில் இருந்து நியூஸ்பெஸ்ட்டுக்கு கருத்து வெளியிட்ட சீன சர்வதேச வானொலி சேவையின் சிங்களப் பிரிவு பணிப்பாளர் ஷென் லீ, சீன மற்றும் இலங்கை நிறுவனங்களின் கூட்டு முயற்சியின் பயனாக இந்த செய்மதி விண்ணில் ஏவப்படவுள்ளதாக கூறினார்.
சீனாவின் சீவோன் விண்வெளி மையத்தில் இருந்து இந்த செய்மதி விண்ணிற்கு ஏவப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2015ஆம் ஆண்டளவில் இந்த செய்மதியுடன் மேலும் மூன்று செய்மதிகளை விண்ணிற்கு ஏவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள் கடந்த வியாழக்கிழமை விண்ணிற்கு ஏவப்படவிருந்த போதிலும் சீரற்ற வானிலை காரணமாக அதற்குத் தடை ஏற்பட்டிருந்தது.
இந்த செயற்கைக்கோளை விண்ணிற்கு ஏவுவதன் மூலம் செயற்கைக்கோள் ஒன்றை விண்ணிற்கு ஏவிய ஆசியாவின் மூன்றாவது நாடு என்ற பெருமையை இலங்கை பெற்றுக்கொள்ளும் என அரச தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக