அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 25 அக்டோபர், 2012

அமைச்சரவை மாற்றத்திற்கு முன் அதிகாரிகள் மட்டத்தில் மாற்றம்?



கிழக்கு, வடமேல் மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகளுக்கான தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம் என பரவலாக பேசப்பட்ட போதிலும்  அதிகாரிகள் மட்டத்திலேயே விரைவில்  மாற்றங்கள் ஏற்படுத்தப்படவிருப்பதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

ஜனாதிபதி செயலகத்திலிருந்தே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக ஜனாதிபதியின் பேச்சாளராக கடமையாற்றி வரும் பந்துல ஜயசேகர இடமாற்றப்பட்டு அவரது வெற்றிடத்துக்கு இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக கடமையாற்றி வரும் மொஹான் சமரநாயக்க நியமிக்க கூடும் என்று தகவல்கள் தெரிவித்தன.

இதேவேளை, இலங்கை இதழியல் கல்லூரியின் பணிப்பாளராக கடமையாற்றும் அனுராதா கே. ஹேரத் ஜனாதிபதியின் சர்வதேச ஊடக பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பியதும் புதிய பேச்சாளர் நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் பேச்சாளரான பந்துல ஜயசேகர டெய்லி நியூஸ் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியராக கடமையாற்றியமை  குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter