13வது அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு அப்பால் சென்ற அதிகார பரவலாக்கம் அவசியம் என்பதுடன், திவிநெகும சட்டமூலம் அமுல்படுத்தப்படுவதும் அவசியம் என ஈ.பி.டி.பி. தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அத்துடன் 13வது அரசியல் அமைப்புத்திருத்தம் இரத்துச் செய்யப்படக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிலர் குறுகிய அரசியல் லாப நோக்கத்தில் மாகாண சபை முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என கூறுகின்றனர்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக கொண்டு வரப்பட்ட 13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தின் மூலம் தமிழ் அரசியல் கட்சிகள் உரிய பிரயோசனத்தை பெறவில்லை.
அடுத்த வருடம் நடைபெறவுள்ள வட மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தானே போட்டியிட போவதாகவும் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக