அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 25 அக்டோபர், 2012

13வது திருத்த சட்டம் அவசியம்; திவிநெகுமவும் தேவை; முதலமைச்சர் வேட்பாளர் நானே!


13வது அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு அப்பால் சென்ற அதிகார பரவலாக்கம் அவசியம் என்பதுடன், திவிநெகும சட்டமூலம் அமுல்படுத்தப்படுவதும் அவசியம் என ஈ.பி.டி.பி. தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அத்துடன் 13வது அரசியல் அமைப்புத்திருத்தம் இரத்துச் செய்யப்படக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிலர் குறுகிய அரசியல் லாப நோக்கத்தில் மாகாண சபை முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என கூறுகின்றனர்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக கொண்டு வரப்பட்ட 13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தின் மூலம் தமிழ் அரசியல் கட்சிகள் உரிய பிரயோசனத்தை பெறவில்லை.
அடுத்த வருடம் நடைபெறவுள்ள வட மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தானே போட்டியிட போவதாகவும் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter