அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 25 அக்டோபர், 2012

இந்தியா குற்றம் சுமத்திய நாளில் இருந்து ஆளும் தரப்பினர் தமிழில் பேசுகின்றனர்!


நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக சுற்றாடல் அமைச்சரிடம் கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு பதில் சுற்றாடல் அமைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ.காதர் தமிழில் பதிலளித்தார்.

ஆனால் சிங்களத்தில் பதில் வழங்குமாறு கயந்த கருணாதிலக்க கூறினார்.
இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய ஏ.எச்.எம்.அஸ்வர் எம். பி. தமிழில் பதில் வழங்குகையில் சிங்களத்தில் பேசுமாறு அழுத்தம் வழங்க முடியாது. இங்கு உரை பெயர்பாளர்கள் பணிபுரிகிறார்கள். அவற்றை செவிமடுக்க முடியும் என தெரிவித்தார்.
அதேவேளை மற்றொரு ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க; இந்தியப் பிரதமர் இலங்கை மீது குற்றம் சுமத்திய நாளில் இருந்து ஆளும் தரப்பினர் சபையில் தமிழில் பேசுவதாகக் கூறினார்.
எதிர்த் தரப்பில் இருந்த போது சிங்களத்தில் பேசிய பிரதி அமைச்சர் காதர் ஆளும் தரப்பிற்கு சென்றதும் தமிழில் பேசுவதாக கயந்த கருணாதிலக்க கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter