நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக சுற்றாடல் அமைச்சரிடம் கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு பதில் சுற்றாடல் அமைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ.காதர் தமிழில் பதிலளித்தார்.
ஆனால் சிங்களத்தில் பதில் வழங்குமாறு கயந்த கருணாதிலக்க கூறினார்.
இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய ஏ.எச்.எம்.அஸ்வர் எம். பி. தமிழில் பதில் வழங்குகையில் சிங்களத்தில் பேசுமாறு அழுத்தம் வழங்க முடியாது. இங்கு உரை பெயர்பாளர்கள் பணிபுரிகிறார்கள். அவற்றை செவிமடுக்க முடியும் என தெரிவித்தார்.
அதேவேளை மற்றொரு ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க; இந்தியப் பிரதமர் இலங்கை மீது குற்றம் சுமத்திய நாளில் இருந்து ஆளும் தரப்பினர் சபையில் தமிழில் பேசுவதாகக் கூறினார்.
எதிர்த் தரப்பில் இருந்த போது சிங்களத்தில் பேசிய பிரதி அமைச்சர் காதர் ஆளும் தரப்பிற்கு சென்றதும் தமிழில் பேசுவதாக கயந்த கருணாதிலக்க கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக