கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் அனுசரனையுடன் கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் ஏற்பாட்டில் இரத்த தான நிகழ்வு நேற்று (07) கல்முனை இருதய நாதர் மண்டபத்தில் நடைபெற்றது.
கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் எம்.ஐ.எம்.சிறாஜ் முயற்சியுடன் நடைபெற்ற இரத்ததான நிகழ்வில் வைத்தியர்களான எம்.ரீ.என்.சிபாய, எச்.ஏ.என்.பிரியாகெலும் மற்றும் கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் தலைவர் எஸ். தங்கவேல் உட்பட சிரேஸ்ட உறுப்பினர்கள் வைத்திய சாலை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த இரத்ததான நிகழ்வில் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக