திங்கள், 8 அக்டோபர், 2012
அட்டனில் இளைஞர் தற்கொலை : இலங்கை கிரிக்கெட் அணி தோற்றதன் விரக்தியா?
அட்டன் குடாஓயா கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் கழுத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.
இருபதுக்கு இருபது உலகக் கிண்ண போட்டியின் இறுதிப்போட்டியைப் பார்த்துவிட்டு மது போதையில் வீட்டுக்கு வந்த இந்த இளைஞன் வீட்டின் அறை ஒன்றின் கதவினை மூடிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இறுதிப்போட்டியில் இலங்கை அணி தோல்வியைத் தழுவியதால் ஏற்பட்ட விரக்தியில் இந்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமெனத் தெரிவிக்கப்படுகின்ற போதும் இது வரை அந்த விடயம் ஊர்ஜிதம் செய்யப்படவில்லை.
சம்பவம் தொடர்பாக அட்டன் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக