அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 8 அக்டோபர், 2012

அட்டனில் இளைஞர் தற்கொலை : இலங்கை கிரிக்கெட் அணி தோற்றதன் விரக்தியா?



அட்டன் குடாஓயா கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் கழுத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண போட்டியின் இறுதிப்போட்டியைப் பார்த்துவிட்டு மது போதையில் வீட்டுக்கு வந்த இந்த இளைஞன் வீட்டின் அறை ஒன்றின் கதவினை மூடிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இறுதிப்போட்டியில் இலங்கை அணி தோல்வியைத் தழுவியதால் ஏற்பட்ட விரக்தியில் இந்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமெனத் தெரிவிக்கப்படுகின்ற போதும் இது வரை அந்த விடயம் ஊர்ஜிதம் செய்யப்படவில்லை.

சம்பவம் தொடர்பாக அட்டன் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter