பண நோட்டுகள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு பொது மக்களுக்கு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
500 ரூபா, 1000 ருபா, 2000 ரூபா, மற்றும் 5000 நோட்டுக்கள் போலியாக அச்சிடுவது தொடர்பில் தொடர்ந்தும் கிடைக்கப்பெற்று வரும் முறைப்பாடுகளை தொடர்ந்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கந்தளாய் பிரதேசத்தில் 1000 ரூபா போலி நோட்டுக்கள் 150வுடன் மூன்று இளைஞர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
கந்தளாய் பிரதேச வர்த்தகர் ஒருவரினால் குறித்த நோட்டுகள் தொடர்பில் சந்தேகம் எழுத்ததை தொடர்ந்து அவர் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்தே இந்த போலி நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த நிலையிலேயே, போலி நோட்டுக்கள் தொடர்பில் பொது மக்கள் அவதானமான இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக