அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 8 அக்டோபர், 2012

பௌத்த விஹாரைகள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும்; பங்களதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உறுதி!



பங்களாதேசில் பௌத்த விஹாரைகள் மற்றும் பௌத்தர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என பங்களதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உறுதியளித்துள்ளார்.
“பௌத்த மக்களை மட்டுமன்றி மிக நீண்ட வரலாற்றை உடைய பௌத்த விஹாரைகள் மீதும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதை தான் நன்கறிவேன். இந்தத் தாக்குதல் சம்பவங்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை.
தாக்குதலுக்கு இலக்கான விஹாரைகளை புனரமைப்பதற்கு அனைத்து உதவிகளையும் அரசாங்கம் வழங்கும். தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது. சம்பவத்தின் பின்னணி குறித்து கண்டறியப்பட்டுள்ளது” எனவும் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter