அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 31 அக்டோபர், 2012

திவிநெகும விடயத்தில் மு.க. தலைவர் மற்றும் செயலாளர் விசாரிக்கப்பட வேண்டும்!


குற்றத்துக்கு உடந்தை என குற்றஞ்சாட்டப்பட்டவரே விசாரணைக்கு தலைமை தாங்கும் விசித்திரம்!
கிழக்கு மாகாண சபையில் திவிநெகும சட்டமூலத்துக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை விசாரிக்கவென அதன் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளமை குற்றத்துக்கு உடந்தை என குற்றஞ்சாட்டப்பட்டவரே விசாரணைக்கு தலைமை தாங்கும் விசித்திரம் நடை பெறுகிறது என அகில இலங்கை உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளதாவது, திவிநெகும சட்ட மூலத்தை காலையில் எதிர்த்த ஸ்ரீலங்கா மு.கா கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மாலையில் ஆதரித்தனர். இதற்குக் காரணம் கேட்டபோது ஆதரிக்கும்படி தலைவர் குறுஞ்செய்தி அனுப்பியதனாலேயே தாம் ஆதரித்ததாக கட்சியின் குழுத்தலைவர் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்தது. பின்னர் தலைவரால் குறுஞ்செய்தி அனுப்பப்படவில்லை என தகவல் வெளியானதை தொடர்ந்து தாம் அவ்வாறு கூறவில்லை என கட்சிக் குழுத்தலைவர் அறிவித்தார்.
கட்சியின் செயலாளர், பிரதி செயலாளர் இது பற்றி கடுமையான ஆவேசம் தெரிவித்ததன் காரணமாக இது பற்றி ஆராய்ந்த கட்சியின் உயர் சபை இவற்றை விசாரிக்கவென கட்சித்தலைவர் தலைமையில் குழுவொன்றை நியமித்துள்ளமை மிகப் பெரிய வேடிக்கையாக உள்ளது.
இது விடயத்தில் தலைவரின் அனுமதியை பெற்றே வாக்களித்ததாக சொல்லப்படுவதால் தலைவரும் இவ்விடயத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். தாம் குறுஞ்செய்தி அனுப்பவில்லை என அவர் இன்னமும் மறுக்கவில்லை. இந்த நிலையில் குற்றஞ்சாற்றப்பட்டவர்களை விசாரிக்கும் நடுவர் விசாரணை குழுவின் தலைவராக தலைவரும் நியமிக்கப்பட்டுள்ளதானது மக்களையும் தமது கட்சி உயர்பீடத்தையும் கேலி செய்வதாக உள்ளது.
அண்மையில் பாகிஸ்தான் நீதிபதி முன்பாக அவரது மகன் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரனை வந்த போது அந்த நீதிபதி விசாரணையிலிருந்து விலகிய செய்தியை கண்டு வியந்த உலகம், குற்றஞ்சாட்டப்பட்டவரே விசாரனைக்கு தலைமை தாங்கும் நிலையை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் கண்டு தலை குணிகிறது.
உண்மையில் இந்த விடயத்தை விசாரித்து உண்மையை காண வேண்டுமாயின் கட்சி சாரா உலமாக்கள் தலைமையில் அனைத்து மாகாணசபை உறுப்பினர்களும், கட்சியின் செயலாளர், மற்றும் தலைவரும் விசாரிக்கப்பட வேண்டும். அதன் மூலமே இது விடயத்தில் திருகு தாளத்தை மேற்கொண்ட சமூகத்துரோகிகள் யார் என அடையாளம் காணமுடியும். இதனை விடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட தலைவரே விசாரணைக் குழுத்தலைவராக இருப்பது திருடர்களை விசாரிக்க திருட்டுக் குற்றம் சாட்டப்பட்ட தலைவரே தலைமை வகிப்பது போன்றதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter