மத்திய அரசாங்கம் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு முயற்சித்து வரும் வேளையில், கிழக்கு மாகாண சபையின் சில நடவடிக்கைகள் மத்திய அரசுக்கு துணைபோகும் வகையில் அமைவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் விசனம் வெளியிட்டுள்ளார்.
செங்கலடி பதுளை வீதியிலுள்ள கிராம மக்களுக்கு விஜயம் செய்த அவர் சமகால அரசியல் நிகழ்வு குறித்து மக்களுக்கு விளமக்களிக்கையிலே இவ்வாறு விசனம் வெளியிட்டுள்ளார்.
அவர் குறித்த சந்திப்பில் தொடர்ந்து விளக்கமளிக்கையில்!
கிழக்கு மாகாண சபை முதலாவது அமர்வு இடம்பெற்ற 48 மணிநேரத்துக்குள் திவிநெகும சட்ட மூலம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. மாகாண சபைகளுக்கு 13ஆவது அரசியலமைப்பு திருத்தப்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பறிக்கும் இந்த சட்டத்திற்கு கிழக்கு மாகாண சபை துணைபோனது.
அண்மைக் காலங்களில் மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் வெளியிட்டு வரும் கருத்துக்கள் இனப்பிரச்சினைக்கான அதிகாரப் பகிர்வின் அடித்தளமான 13ஆவது திருத்தத்தை நீக்குவது தொடர்பாகவே அமைகின்றது. மத்திய அரசாங்கத்திலே பலம் பொருந்திய அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் இது பற்றிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள்.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கூட 13ஆவது அரசியலமைப்பு நீக்கப்பட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். கீறல் விழுந்த இசைத்தட்டு போல் 13ஆவது அரசியல் அமைப்பு நீக்கப்பட்ட வேண்டும் என்ற கருத்து ஆளும்தரப்பு சில அரசியல்வாதிகளிடம் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.
போருக்குப் பின்னர் ஜனாதிபதி இந்தியா போன்ற நாடுகளுக்கு அளித்த உத்தரவாதத்தில் 13 பிளஸ் அதிகாரப் பகிர்வை அதாவது அதற்கு மேல் வழங்குவதாகக் கூறியிருந்தார். ஆனால் நடைபெறுகின்ற நிகழ்வுகளைப் பார்த்தால் 13பிளஸ் அல்ல அது இப்போ மைனஸ் ஆகும் வகையில் திவிநெகும சட்டம் அமைகிறது.
அதாவது அதிகாரங்களைக் குறைக்கின்றது. அடுத்த கட்டம் அதனை இல்லாமல் செய்வதற்கு ஒரு சாரார் வெளியிட்டுள்ள கருத்துக்களும் அமைகின்றன. தமிழ் மக்கள் தங்களுக்கு நியாயமான அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்கும் வேளையில் சர்வதேச சமூகம் தமிழ் மக்களுக்கு நியாயமான அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என அழுத்தம் கொடுத்து வரும்வேளையில் ஏற்கனவே கொடுத்த அதிகாரங்களைக் கூட அரசாங்கம் பறித்தெடுக்க முற்படுகின்றது.
அண்மையில் அமைச்சர் தினேஸ் குணவர்தன கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளை மாகாண சபைக்கு வழங்கியமையானது மத்திய அரசாங்கம் விட்டதவறு மாகாண சபைகளுக்கு வழங்கியமையானது மத்திய அரசாங்கம் விட்ட தவறு மாகாண சபைகளுக்கு வழங்கியிருந்தது என்று கூறியிருந்தார். இந்த கருத்து மாகாண சபைகளுக்கு தற்போது இருக்கும் அதிகாரங்களைக் கூட எதிர்காலத்தில் பறிப்பதையே காட்டுகின்றது.
மத்திய அரசாங்கம் இருக்கும் அதிகாரங்களை உள்ளுராட்சி மற்;றும் மாகாண சபைகளிடமிருந்து பறிக்கிறது. திருகோணமலை மீன் சந்தை நகர சபையின் அனுமதியோ, ஆலோசனையோ இன்றி மத்திய மீன் பிடித்துறை அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. திருகோணமலை ஆதார வைத்தியசாலை மத்திய அரசினால் பொறுப்பேற்கப்படவுள்ளது. வைத்தியசாலை அபிவிருத்தியை காரணம் காட்டி மாகாண சபை அமைச்சர்கள் வாரியம் இதற்கு துணைபோகிறது.
தற்போது கிழக்கு மாகாண சபை முதலாவது அமைச்சரவை வாரியம் இந்த கைங்கரியத்தை செய்துள்ளது. அப்படி வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வது என்றால் மாகாண சபைக்கு முடியாதா? இவற்றை உற்று நோக்கினால் கிழக்கு மாகாண சபையும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்குத் துணைபோவதாகவே அமைகின்றது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக