அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 5 டிசம்பர், 2012

சிங்களவர் பிள்ளைகள் பெறுவதை குறைத்துள்ளதால் பௌத்த பிக்குகளுக்கு தட்டுப்பாடு




சிங்களக் குடும்பங்கள் பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் எண்ணிக்கையில் குறைவு காணப்படுகின்றது இது எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என  மஹாநாயக்கர் பரவாஹர சந்தரதன தேரர் பிரான்ஸில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையில் சிங்களக் குடும்பங்கள் தற்போது குழந்தைகளைப் பெற்றெடுக்கும் எண்ணிக்கையினைக் குறைத்துள்ளது இதனால் எதிர்காலத்தில் பௌத்த துறவிகளை உருவாக்குவதில் பாதிப்பு ஏற்படும்.

எனவே எதிர்காலத்தில் இலங்கையில் 5 குழந்தைகளைப் பெற்றெடுக்கும் சிங்களக் குடும்பத்திற்கு பரிசில்களும் உதவிகளும் வழங்கப்படவுள்ளது. இத்திட்டமானது எதிர்வரும் ஆண்டில் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

தற்போது இலங்கையில் உள்ள சிங்களக் குடும்பங்களில் பிள்ளைகள் இல்லாத காரணத்தினால் பங்களாதேசிலிருந்து பிள்ளைகள் வரவழைக்கப்பட்டு பௌத்த துறவிகளாக மாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிங்கள இனம் அழிவடைந்து செல்கின்றது என்றார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter