கிரகங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள அமெரிக்காவின் நாசா மையம் வாயேஜர்-1, வாயேஜர்-2 என்ற விண்கலன்களை விண்ணில் செலுத்தியது. கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1977-ம் ஆண்டு இவை அனுப்பப்பட்டன. தற்போது இவை சூரிய மண்டலத்தில் ஊடுருவி பயணம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் வாயேஜர்-1 விண்கலம் சூரிய மண்டலத்தின் புதிய பகுதிக்குள் நுழைந்து விட்டது. அது விண்வெளிக்கும், நட்சத்திர கூட்டத்துக்கும் இடைப்பட்ட பகுதியாகும். சூரிய மண்டலத்தில் இதுவரை இந்த பகுதி கண்டுபிடிக்கப்படவில்லை என நாசாவின் வாயேஜர் திட்ட இயக்குனர் எட்ஸ்டோன் தெரிவித்துள்ளார்.
மேலும், வாயேஜர்-1 விண்கலத்தின் இந்த புதிய கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு நடக்கும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இதற்கிடையே, வாயேஜர்-2 விண்கலம் தற்போது 900 கோடி மைல் தூரத்தில் பயணம் செய்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக