அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 5 டிசம்பர், 2012

சூரிய மண்டலத்தில் புதிய பகுதி கண்டுபிடிப்பு


கிரகங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள அமெரிக்காவின் நாசா மையம் வாயேஜர்-1, வாயேஜர்-2 என்ற விண்கலன்களை விண்ணில் செலுத்தியது. கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1977-ம் ஆண்டு இவை அனுப்பப்பட்டன. தற்போது இவை சூரிய மண்டலத்தில் ஊடுருவி பயணம் செய்து வருகின்றன. 

இந்த நிலையில் வாயேஜர்-1 விண்கலம் சூரிய மண்டலத்தின் புதிய பகுதிக்குள் நுழைந்து விட்டது. அது விண்வெளிக்கும், நட்சத்திர கூட்டத்துக்கும் இடைப்பட்ட பகுதியாகும். சூரிய மண்டலத்தில் இதுவரை இந்த பகுதி கண்டுபிடிக்கப்படவில்லை என நாசாவின் வாயேஜர் திட்ட இயக்குனர் எட்ஸ்டோன் தெரிவித்துள்ளார். 

மேலும், வாயேஜர்-1 விண்கலத்தின் இந்த புதிய கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு நடக்கும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இதற்கிடையே, வாயேஜர்-2 விண்கலம் தற்போது 900 கோடி மைல் தூரத்தில் பயணம் செய்து வருகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter