நாடாளுமன்ற சபைக்கு தலைமை தாங்கும் தவிசாளர் குழாமிலிருந்து ஆளும் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம்.அஸ்வர் நீக்கப்பட்டுள்ளார்.
அக்கிராசனத்தில் இருந்து சபைக்கு தலைமை தாங்கும் போது பக்கசார்பாக நடந்து கொள்கின்றார் என எதிர்க் கட்சியினர் செய்த முறைப்பாட்டினை அடுத்தே அந்த குழாமிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வரை நீக்குவதற்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார் என அறிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற அமர்வுகளுக்கு சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தலைவர் தலைமை தாங்காத சந்தர்ப்பங்களில் தவிசாளர் குழாமிலுள்ள ஒருவர் அவைக்கு தலைமை தாங்குவார்.
குறித்த அந்த குழு உறுப்பினர்களை நியமிப்பதற்கும் நீக்குவதற்குமான அதிகாரம் சபாநாயகருக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக