அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 5 டிசம்பர், 2012

அஸ்வர் எம்.பி. இனித் தலைமை தாங்க முடியாது; சபாநாயகர் ஆப்பு!


நாடாளுமன்ற சபைக்கு தலைமை தாங்கும் தவிசாளர் குழாமிலிருந்து ஆளும் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம்.அஸ்வர் நீக்கப்பட்டுள்ளார்.
அக்கிராசனத்தில் இருந்து சபைக்கு தலைமை தாங்கும் போது பக்கசார்பாக நடந்து கொள்கின்றார் என எதிர்க் கட்சியினர் செய்த முறைப்பாட்டினை அடுத்தே அந்த குழாமிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வரை நீக்குவதற்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார் என அறிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற அமர்வுகளுக்கு சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தலைவர் தலைமை தாங்காத சந்தர்ப்பங்களில் தவிசாளர் குழாமிலுள்ள ஒருவர் அவைக்கு தலைமை தாங்குவார்.
குறித்த அந்த குழு உறுப்பினர்களை நியமிப்பதற்கும் நீக்குவதற்குமான அதிகாரம் சபாநாயகருக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter