அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 1 நவம்பர், 2012

நிவாரணம் வழங்க 200 மில்லியன் கை இருப்பில்; அமைச்சின் அதிகாரிகளுக்கான விடுமுறையும் ரத்து!


இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க 200 மில்லியன் ரூபா பணம் இருப்பில் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிதியும் மீதமிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு அமைச்சின் அதிகாரிகளுக்கான விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.
கொழும்பில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்க அதிகாரிகள் 24 மணிநேரமும் செயற்பட்டு வருவதாகவும் குறைபாடுகள் இன்றி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter