இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க 200 மில்லியன் ரூபா பணம் இருப்பில் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிதியும் மீதமிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு அமைச்சின் அதிகாரிகளுக்கான விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.
கொழும்பில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்க அதிகாரிகள் 24 மணிநேரமும் செயற்பட்டு வருவதாகவும் குறைபாடுகள் இன்றி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக