அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 1 நவம்பர், 2012

சேதங்களை மதிப்பிட சென்ற குழுவினரின் வாகனம் மீது மரம் விழுந்தது


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம் அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் வாகனம் மீது பாரிய மரமொன்று  விழுந்ததினால்  வாகனம் பலத்த சேதற்திற்குள்ளாகியது.

புத்தளம் பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை வீசிய கடும் காற்றினால் ஏற்பட்ட சேத விபரங்களை மதிப்பிட சென்ற குழுவினரின் வாகனமே இவ்வாறு சேதமடைந்துள்ளது.

மேற்படி வாகனத்தில் பயணித்தவர்கள் மயிரிழையில் உயிர்தப்பினர் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ் வாகனத்தில், புத்தளம் மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் பொறுப்பாளர் பிரிக்கேடியர் ரணவீர தலைமையிலான குழுவினர் பயணித்துள்ளனர்.

இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் நேற்று இரவு வீசிய கடும் காற்றினால் வீடுகள், கடைகள் உள்ளடங்களாக 20 கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன்  நான்கு பேர் காயமடைந்துள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்தது.

புத்தளத்தில் 10 வீடுகள் சேதமுற்றுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் உடப்பு பிரதேசத்தில் 10 கட்டடிடங்கள் சேதமுற்றுள்ளதுடன் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்தம் இடம்பெற்ற இடங்களுக்கு உடனடியாக விஜயம் மேற்கொண்ட புத்தளம் நகரசபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ் நிலைமைகளினை நேரடியாக அவதானித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter