அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

குர்பான் கடமையை நிறைவேற்ற தடைகள் இருக்காது

ACJU Logoஇந்த முறை குர்பான் கடமையை நிறைவேற்ற தடைகள் ஏற்படுத்தப்படும் என்ற அச்ச உணர்வு தொடர்பாக கருத்துரைத்துள்ள அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் துணைச் செயலாளர் தாஸீம் மௌலவி, இந்த முறையும் கடந்த முறைகள் போன்று குர்பான் கடமையை நிறைவேற்ற தடைகள் ஏற்படாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் .
அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் வேண்டுகோளுக்கு இணங்க பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா, பாதுகாப்பு செயலாளருடன் இது தொடர்பாக பேசியுள்ளார். குர்பானுக்கு பாதகம் ஏற்படாதவிதமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பில் சுற்று நிரூபம் ஒன்றை வெளியிடலாம் என்றும் தாஸீம் மௌலவி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter