கட்டாரில் சாரதியாக தொழில் புரிந்து வந்த மட்டக்களப்பு, மண்முனைப்பற்று, புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 28 வயதுடைய திருச்செல்வம் கிருஸ்ணபிள்ளை என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்படுகிறது.
இதனை கட்டார் அரசாங்கம் உறுதி செய்துள்ளது. அத்துடன் இலங்கை அரசாங்கத்தினூடாக குடும்பத்தினருக்கு அறிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை இரவு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கட்டார் பொலிஸ் தெரிவித்துள்ளது.
குறித்த இளைஞரின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் அவரது அதே ஊரான புதுக்குடியிருப்பைச் சேர்ந்த நால்வரை கட்டார் பொலிசார் கைது செய்து விசாரணை செய்து வருவதாகவும் மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்த இளைஞர் தாக்கப்பட்டு இறந்ததாகவும் உடனடி விசாரனைகளின் பின் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக