அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 9 மே, 2013

தேசிய ரீதியில் வெற்றி பெற்ற நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலைக்குப் பல்வேறு வழிகளில் அன்பளிப்புக்கள்.


( நிந்தவூர் தினகரன் விசேட நிருபர்) 

நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை, தேசிய ரீதியில் நடைபெற்ற உற்பத்தித் திறன் விருது போட்டியில் இரண்டாமிடம் பெற்றதைத் தொடர்ந்து இவ்வைத்தியசசாலைக்குப் பல வழிகளில் இருந்தும் பல்வேறு அன்பளிப்புக்கள் கிடைத்த வண்ணமுள்ளன.

நிந்தவூர் மாவட்ட வைத்திய அதிகாரி எம்.சி.எம்.மாஹீர் மூலம் வைத்தியசாலையின் பல்வேறு தேவைகளைக்  கேட்டறிந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹசன் அலி, எம்.சி.எம்.பைசால் காசீம் , நிந்தவூர் அமானா வங்கி முகாமையாளர்,  நிந்தவூர் ஹட்டன் நசனல் வங்கி முகாமையாளர், நிந்தவூர் மக்கள் வங்கி முகாமையாளர் போன்றோருடன் மேலும் நல்லுள்ளம் கொண்ட தனவந்தர்கள் பலரும் பல அன்பளிப்புக்களை வழங்கி வருகின்றனர்.

இ;வ்வாறானதொரு நிகழ்வு அண்மையில் (07.05.2013) நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையில் , வைத்தியதிகாரி எம்.சி.எம்.மாஹீர் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பற்றாக்குறையான மருந்துகள், அன்றாடப் பாவனைப் பொருட்கள், சிறிய அத்தியவசிய  உபகரணங்கள் என்பனவும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம், வைத்தியசாலை அபிவிருத்திச் சபையினர், வைத்தியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter