சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தனது மகள் இந்த மாதத்திற்கிடையில் வீடு திரும்பி வருவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்பதாக றிசானாவின் தாயார் யாழ் முஸ்லிம் இணையத்திற்கு தொலைபேசி மூலமாக குறிப்பிட்டார்.
இதுகுறித்து அவர் மேலும் தகவல் தருகையில்,
நேற்று ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணியளவில் ஒரு முஸ்லிம் எம்.பி. எமக்கு தொலைபேசி அழைப்பு எடுத்தார். சவூதி மன்னருக்கு தற்போது சுகமில்லையென்றும், அதன்பொருட்டு சவூதியில் சிறைவைக்கப்பட்டுள்ள சிலருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாகவும், அவ்வாறு பொது மன்னிப்பு வழங்கப்படுபவர் பட்டியலில் எனது மகள் றிசானாவும் உள்ளடங்குவதாகவும் குறிப்பிட்டார். 100 சதவீதம் அவள் விடுதலை பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.
தற்போது இலங்கை சட்டமா அதிபரும் சவூதி சென்றுள்ளார். இந்நிலையில் எனது மகள் வீடு திருப்புவாள் என்று நான் நம்புகிறேன். அவள் 7 வருடங்களும், 7 மாதங்களும் சிறையில் இருந்துள்ளாள். எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம். எங்கள் மகள் எங்களிடம் வந்துசேர்ந்தாள் அதுவே போதும எனவும் றிசானாவின் தாயார் மேலும் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக