அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 12 டிசம்பர், 2012

முஸ்ஸியை வெளியேற்ற முயன்றால் இஸ்லாமிய புரட்சி வெடிக்கும் - சலபிகள் எச்சரிக்கை



(tn) ஜனநாயக முறையில் தேர்வான நாட்டின் ஜனாதிபதியை வெளியேற்ற முற்பட்டால் இஸ்லாமிய புரட்சி வெடிக்கும் என எகிப்து சலபி பிரிவின் முன்னணி தலைவர் சயீத் அப்துல் அஸிம் எச்சரிக்கை விடுத்தார்.

“மதச்சார்பற்றோர் ஜனாதிபதியை வெளியேற்றவோ அல்லது ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடவோ முயற்சித்தால் அதுவரை நாம் சும்மா இருக்கமாட்டோம். எண்ணிலடங்காத மக்களைக் கொண்டு ஒரு இஸ்லாமிய புரட்சிக்கான ஏற்பாட்டை செய்வோம்” என்று அலக்சான்ட்ரியா நகரில் நேற்று முன்தினம் நடந்த ஊடக மாநாட்டில் அப்துல் அஸிம் குறிப்பிட்டார்.

இதில் எதிர்த்தரப்பினர் வெளிநாட்டு நிதியில் அமெரிக்காவின் தாக்கத்துடன் இஸ்ரேலுக்கு ஏற்றவாறு எகிப்தின் தலைவிதியை மாற்ற முற்படுவதாகவும் முன்னணி சலபி தலைவர் குற்றம் சாட்டினார். அவர்கள் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் என எதிர்த்தரப்பு தலைவர்கள் மீது அவர் குற்றம்சாட்டினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter