அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 12 டிசம்பர், 2012

பரீட்சை எழுதிவிட்டு வந்த மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை


மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பிரதேசத்தில் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை எழுதிவிட்டு வீட்டுக்கு திரும்பியிருந்த மாணவி நேற்று மாலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


ரி.வினோதினி (16) என்ற மாங்காடு பாடசாலை மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று காலை பரீட்சைக்குச் சென்று திரும்பிய வினோதினி வீட்டில் படித்தக் கொண்டிருக்க வீட்டார் வெளியில் சென்று திரும்பி வந்து பார்க்கையிலேயே இம் மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter