அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

தொழில்வாய்ப்புகள் உள்ளன, ஆனால் தகுதியுடையவர்கள் இல்லை - கல்வியமைச்சர் பந்துல



உலகில் எந்தவொரு பிரிவினதும் விடுபட முடியாத 3 காரணங்கள் தொடர்பாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன விளக்கமளித்துள்ளார்.

கல்வியமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், சமகாலத்தில் வறிய நிலையில், கல்வியைப் பெறும் மாணவர்களுக்கு வளங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதில் பாரிய முரண்பாடுகள் இருப்பதாக தெரிவித்தார்.

இதன்காரணமாக, நாட்டின் மாணவர்கள் சராசரியில் 22 வீதமானவர்களே, உயர்தரத்தில், விஞ்ஞான, கணித, தொழினுட்ப, கல்வியைத் தொடர்கின்றனர்.
ஏனையவர்களில் பெரும்பாலானவர்கள் கலைத்துறையில் கல்வி பயில்கின்றனர்.

அவர்களுக்கு தகுதிக்கேற்ற தொழில்வாய்ப்புகள் கிடைப்பதில்லை. நாளைய எதிர்காலம் அவர்களுக்கு கிடைக்காத நிலை ஏற்படுகிறது. தொழில்வாய்ப்புகள் இருக்கின்றன, ஆனால் அதற்கான தகுதியுடையவர்களை இந்த கல்வித்துறை உருவாக்கவில்லை என்றும் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter