அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

பாகிஸ்தானில் காலாவதியான மருந்து சாப்பிட்ட 16 பேர் வபாத் - 38 பேருக்கு தீவிர சிகிச்சை




பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா நகர மருந்து கடை ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட இருமல் மருந்தை சாப்பிட்டவர்கள் மயக்கமடைந்தனர். அங்கு கடந்த புதனிலிருந்து விற்கப்பட்ட இருமல் மருந்தை சாப்பிட்ட 54 பேர், அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் போதைப்பொருளுக்கு அடிமையான 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 38 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

காலாவதியான மருந்தை விற்ற கடைக்காரரை போலீஸ் கைது செய்துள்ளது. லாகூரில் காலாவதியான மருந்தை சாப்பிட்டு, ஜனவரி மாதம் 100 பேரும், நவம்பர் மாதம் 19 பேரும் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter