ஐக்கிய நாடுகள் அமைப்பின் அனுசரணையுடன் வருடாந்தம் நடைபெறும் நீதவான்களுக்கான மாநாட்டை அரசாங்கம் ரத்து செய்த போதிலும், அம்மாநாட்டை திட்டமிட்டபடி நடாத்த நீதவான்கள் தீர்மானித்துள்ளனர்.
அரசாங்கம் இந்த மாநாட்டை ரத்து செய்த போதிலும், திட்டமிட்டபடி மாநாட்டை நடாத்த நீதவான்கள் தீர்மானித்துள்ளனர். நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் இந்த வருடாந்த மாநாடு நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொள்வார். முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன் இந்த மாநாட்டின் பிரதம சொற்பொழிவாளராக கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வருடாந்த நீதவான்கள் மாநாட்டிற்கு தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சு நிதி அனுசரணை வழங்கி வந்ததாகவும், அரசியல் காரணங்களுக்காக இம்முறை அனுசரணை மறுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் தன்னார்வ அடிப்படையில் நீதவான்களின் பங்களிப்புடன் இந்த மாநாடு நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக