(அபூ நாதில்)
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தெதுரு ஓயா, பத்துளு ஓயா, கடுபிடி ஓயா மற்றும் ஹெமில்டன் அளை வழிந்தோடுவதால் புத்தளம் மாவட்டத்தில் 7 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தரை போக்குவரத்து மற்றும் புகையிரத போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கும் பணியில் கடற் படை மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக