அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 5 நவம்பர், 2012

நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்; அமெரிக்கா வெளியிட்டுள்ள கருத்து தவறானது என்கிறார் பீரிஸ்!


பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள கருத்து ஏற்புடையதல்ல என இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் சில சர்வதேச அமைப்புகள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து கருத்து வெளியிட்டுள்ளனர். எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மை நிலைமைகளை புரிந்து கொள்ளாமலேயே சில நாடுகளும் சர்வதேச அமைப்புக்களும் இலங்கை அரசாங்கத்திற்கு விரோதமான வகையில் கருத்து வெளியிட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பிரதம நீதியரசருக்கு எதிராக எவ்வாறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன என்பது பற்றி கூட அறிந்து கொள்ளாமல் விமர்சனக் கணைகள் தொடுக்கப்பட்டுள்ளமை வருத்தமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக நாடுகள் இலங்கையை நோக்கும் விதம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசனத்திற்கு அமைவான முறையில் சகல சட்டங்களையும் பின்பற்றியே நம்பிக்கையில்லா தீர்மான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter