அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 5 நவம்பர், 2012

சந்திரிகா தலைவிரி கோலமாக ஆடைகளின்றி, வீதியில் ஒடும் காலம் நெருங்கி விட்டது; அமைச்சர் எஸ்.பி.



முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆடைகளின்றி, வீதியில் ஒடும் காலம் கிட்டியுள்ளதாக உயர் க்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மிகப் பெரிய கட்சியாகும். இந்த கட்சியின் செயலாளராக இருந்த நான் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விசர்பிடித்து ஆடியதால், அந்த பதவியையும், கட்சியையும் விட்டுச் செல்ல நேர்ந்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
கண்டி உடநுவர பிரதேசத்தில் நடைபெற்ற திவிநெகும சட்ட மூலம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி பைத்தியம் பிடித்து ஆடைகளின்றி வீதியில் ஓடுவார் என்று நான் முன்னர் கூறியது தற்போது நடந்து வருகிறது.
தற்போது உண்மையில் சந்திரிகாவுக்கு விசர்பிடித்துள்ளது. அவர் தலைவிரி கோலமாக ஆடைகளின்றி வீதியில் ஓடும் நாள் மிக விரைவில் வரும் எனவும் எஸ்.பி. திஸாநாயக்க கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter