அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 18 அக்டோபர், 2012

மன்னார் நீதிபதிக்கும் முஸ்லிம் மீனவர்களுக்கும் இடையிலான பிரச்சினையின் பின்னணி!



அண்மையில் மன்னாரில் நடைப்பெற்ற சம்பவங்களையிட்டு எழுந்துள்ள கேள்விகளுக்கு விடைகளைக் காண வேண்டியுள்ளது. ஐ_லை மாதம் 16ம்,18ம் திகதிகளில் உப்புக்குள மீனவ சமூகம் மன்னார் நீதிமன்றத்திற்கு வெளியே எதற்காக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்கள். 300க்கு மேற்பட்ட மீன்பிடியாளர்கள் ஐ_லை மாதம் 16ம் திகதியும,; 500க்கு மேற்பட்ட மீனவர்கள் ஐ_லை மாதம்18ம் திகதியும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். 
இவ்விரு பேரணிகளும் மன்னார் நீதவான் அந்தோனிப்பிள்ளை ஐ_ட்சனுக்கு எதிரானவையாகும். எதற்காக பேரணி நடத்தினார்கள்? அவர்களின் குற்றச்சாட்டு என்ன? இந்த குற்றச்சாட்டுக்கள் எவை என்பதையும் பேரணி எதற்காக நடத்தினார்கள் என்பதையும் யார் விசாரணை செய்வார்கள்?
2009ம் மே மாதம் 25ம் திகதி நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஐ_ட்சனுக்கு எதிராக குற்றச்சாட்டொன்று நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பள்ளிவாயிலனால் சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டுக்களை நீதிச்சேவை ஆணைக் குழச் செயலாளர் பெற்றுக் கொண்டதாகவோ, அல்லது அவற்றுக்கான நடவடிக்கை எடுத்ததாகவோ தெரியவில்லை.
அத்துடன் பள்ளி நிர்வாகத்தினர் ஒர் அதிகாரி தங்கள் பகுதிக்கு வந்து விசாரணை நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொணடிருந்தனர்;. இதற்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என யுளயைn வுசiடிரநெ அறிந்துள்ளது.
இதன்பிறகு இவ்வருடம் ஐ_ன் மாதம் ஜந்துக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதாவது மன்னார் நீதவான் சுயமாக செயல்படவில்லை என்றும் பக்கசார்பாக உள்ளார் என்றும் குறை கூறப்பட்டுள்ளது. இந்தச் குற்றச்சாட்டுக்களுக்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுத்ததாக அறியப்படவில்லை.
இலங்கையின் அரசியல் யாப்பின்படி மாவட்ட நீதிபதிகளின் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை நீதிச்சேவை ஆணைக்குழு கட்டுப்படுத்தும.; அதேவேளை உயர்நீதிமன்ற ஒழுக்காற்று நடவடிக்கைகள் ஐனாதிபதியின் விதப்புரைக்கேற்ப நீதிச்சேவை ஆணைக்குழு கட்டுப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
பொதுமகன் ஒருவர் மஐPஸ்ரேட் நீதிபதி ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைக் குற்றச்சாட்டுக்களை கூற வேண்டுமானால் நீதிச்சேவை ஆணைக் குழுவை நாட வேண்டிய அதே வேளை உயர்நீதிமன்ற நீதிபதி மீது ஒழுக்காற்று நடவடிக்கை குற்றச்சாட்டுக்களை கூற வேண்டுமானால் ஐனாதிபதியை நாட வேண்டும். ஐனாதிபதி நீதிச்சேவை ஆணைக்குழு மூலமாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்.
நீதிமன்றங்கள் மக்களது நியாயதிக்கத்தை அமுல்படுத்துகையில் நீதிச்சேவை ஆணைக்குழுவின் கதவுகள் எப்பொழுதும் மக்கள் பிரதிநிதித்துவத்திற்குத் திறந்திருக்க வேண்டும். மக்கள் தெரிவு செய்த பிரதிநிதி, மக்களுக்காக ஒரு பிரதிநிதித்துவத்தை எற்படுத்துவதற்கு ஏற்புடையவர்.
அரசியல் யாப்பின் சரத்து 4ஊ இதுபற்றி தெளிவாக பின்வருமாறு விளக்கியுள்ளது. ‘மக்களின் நியாயதிக்கமானது பாராளுமன்றத்தின் மூலம் நீதிமன்றமூடாக நடைமுறைப்படுத்தப்படும் என்றாலும் நபர் ஒருவர் இது தவிர்ந்த வேறுவழிகளில் நீதிச்சேவைஆணைக்குழுவின் நடவடிக்கை மீது செல்வாக்கு செலுத்த நினைப்பதோ அல்லது அதன் மீது ஆதிக்கம் செலுத்த நினைப்பதோ தண்டனைக்குரிய குற்றம் இழைக்கப்பட்டுள்ளதாக கூற முடியும் .
நீதிச்சேவை ஆணைக்குழுவின் கட்டளை தீர்மானத்தின் மீது அதிக்கம் செலுத்துவதோ அல்லது செலுத்த முயல்வதோ ஒழுக்காற்று நடவடிக்கைகள் சம்பந்தமான பிரதிநிதித்துவப் படுத்தலிருந்தும் வேறுபட்டதாகும். பொதுமக்களின் பிரதிநிதித்துவதற்கான இக்கதவுக்கள் முடப்பட்டியிருக்குமாயின் பேரணி நடத்துவதற்கான கதவுகள் வலுக்கட்டயமாக திறக்கப்படும். அநேகமாக மன்னாரில் இதுவே நடைப் பெற்றிருந்தது.
பின்புலம்
1990ம் ஆண்டு உப்புக்குளத்திலிருந்து ஆயிரக்கணக்கான முஸ்லீம் மீனவர் குடும்பங்கள், தமிழீழ விடுதலைப் புலிக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter