அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 18 அக்டோபர், 2012

சொந்த கட்டிடத்தை பம்பலப்பிட்டி முஸ்லீம் மகளிர் கல்லூரிக்கு அன்பளிப்பு செய்ய அமைச்சர் பௌஸி முடிவு!



-அஷ்ரப் ஏ.சமத், ஏ.எஸ்.எம்.ஜாவித்-
அமைச்ர் ஏ.எச்.எம்.பௌஸி 4 கோடி ருபா பெறுமதியான தனது சொந்தக் கட்டிடத்தை பம்பலப்பிட்டி முஸ்லீம் மகளிர் கல்லூரிக்கு அன்பளிப்பு செய்யவுள்ளார்.
பம்பலப்பிட்டி முஸ்லீம் மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள 4 கோடி ருபா பெறுமதியான தனது சொந்தக் கட்டிடத்தை முஸ்லீம் மகளிர் கல்லூரிக்கு கையளிக்க உள்ளதாக அமைச்சர் பௌஸி தெரிவித்தார்.
அவரது 75வது பிறந்த தினமான கடந்த சனிக்கிழமை கல்லூரியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிலேயே அமைச்சர் ஏ.எச்.எம் பவுசி இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வு பம்பலப்பிட்டி முஸ்லீம் மகளிர் கல்லூரியின் அதிபர் கலாநிதி ஹாஜான் மன்சூர் தலைமையில் நடைபெற்றது.
இக்காணியில் மேற்கொள்ளப்படும் நிர்மாணப் பணிகள் முடிவடைந்ததும் அடுத்த மாத இறுதியில் இக்காணியையும் கட்டிடத்தையும் கல்லூரியில் சம்பிரதாயபூர்வமாக கையளிப்பதாக அமைச்சர் பவுசி தெரிவித்தார்.
“நான் கொழும்பு மாவட்டத்தில் இளம் மேயராக பதவியேற்று கடந்த 50 வருடங்களாக இந்நாட்டில் உள்ள முவீன மக்களுக்கும் சேவையாற்றி வருகின்றேன்.
கடந்த காலங்களில் முவீன மக்களும் இணைந்து தனக்கு வாக்களித்தனால் கொழும்பு மாவட்டத்தில் முதல் விருப்பு வாக்குகளைப் பெற்றவனாக வந்துள்ளேன்.
சுகாதார, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், சுற்றாடல் அமைச்சு போன்ற பல்வேறு அமைச்சுக்களை பாரமெடுத்து தன்னால் முடியுமான அளவுக்கு தனது சமுகத்திற்கும் நாட்டுக்கும் சேவையாற்றியுள்ளேன்.
கடந்த யுத்த காலத்தின் போது பயங்கரவாதிகளின் தனக்கு வைத்த 3 குண்டு தாக்குதலில் தப்பி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளேன். நான் மக்களுக்கு நல்லதையே செய்கின்றேன். அதற்காகவே இறைவன் என்னை இத்தாக்குதலில் இருந்து பாதுகாத்துள்ளான்” எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவிகளை பாராட்டி சான்றிதழும் பதக்கமும் அனிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter