சிலாவத்துறையில் 50 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா
குவைத் நாட்டின் ஸகாத் ஹவுஸின் அனுசரனையில் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள சிலாவத்துறையில் 50 வீடுகள் நிர்மாணிப்பு பணியை ஆரம்பித்து வைக்குமுகமாக அடிக்கல் நாட்டுவிழா 30.09.2012 அன்று நடைப்பெற்றது.
இவ் விழாவில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்ட குவைத் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கௌரவ யாகூப் யூசுப் அல் அதீகி அடிக்கல் நாட்டு விழாவை ஆரம்பித்து வைத்தார்.
இவ்விழாவிற்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மதிப்புக்குரிய ஹூசைன் பாரூக் மற்றும் முத்தாலி பாவா பாரூக், முசலி பிரதேச சபை தலைவர் டபிள்யூ.எம்.எஹியன், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் சமூக சேவைப்பிரிவு செயலாளர் மௌலவி எம்.அப்துர் ரஹ்மான அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இந்த வீட்டுத்திட்டம் மன்னார் மாவட்டத்தில் மீளக்குடியேற ஆரம்பித்துள்ள அகதி மக்களின் நலனுக்காக அமைக்கப்படுகின்றன. மேலும் இலங்கை ஜமா- அத்தே இஸ்லாமி குவைத் நாட்டின் நிவாரண குழுவுடன் இணைந்து நனத்தன் பிரிவுக்குட்பட்ட நொச்சிகுளம் பகுதியில் 42 வீடுகளை ஏற்கனவே கட்டி முடித்து பொதுமக்களின் பாவனைக்காக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக