அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 2 அக்டோபர், 2012

சிறுவர் துஷ்பிரயோகம் செய்யும் தவறாளிகளை நீதவான் முன் கொண்டு செல்லத் தயங்காதீர்கள் – அப்துல் அஸீஸ்


சிறுவர் துஷ்பிரயோகம் செய்யும் தவறாளிகளை நீதவான் முன் கொண்டு செல்லத் தயங்காதீர்கள் – அப்துல் அஸீஸ்

- எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் -
இலங்கையில் சிறுவர் உரிமை தொடர்பில் பரந்த நோக்குடன் சர்வதேச தராதரங்கள் சட்டங்களினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் அரசும், சமூகமும் சிறுவர்களின் அதி உயர் நலனுக்காக அக்கறையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டிய கடற்பாடு இருக்கின்றதென்பதை அனைவர்களும் உணரவேண்டும்.
எமது நாட்டில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் நாளுக்கு நாள் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் நடைபெற்று வருவதாக ஊடகங்கள் தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறது. இது எமது நாட்டிற்கு மட்டுமின்றி எல்லா நாடுகளுக்கும் பொதுவான ஓர் பிரச்சினை.
அதிகமான சிறுவர்கள் இம்சைகளினால் பாதிக்கப்பட்டிருந்தும் இதற்குப் பொறுப்பான குற்றவாளிகள் சட்டத்திற்கு முன் கொண்டு வரப்பட்டு, நீதிமன்றம் மூலம் தண்டனை பெறுகின்ற வீதம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. இதற்குக் காரணம் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் குடும்பத்தினர்கள் இதனை பெரிதுபடுத்தாமல் மூடிமறைக்கின்றனர். எனவே சிறுவர் துஷ்பிரயோகம் செய்யும் தவறாளிகளை, நீதவான் முன் கொண்டு செல்லத் தயங்காதீர்கள் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரி அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
மனித அபிவிருத்தி தாபனத்தின் ஏற்பாட்டில் துறைநீலாவனை வித்தியாலயத்தில் இளைஞர், யுவதிகளுக்கான செயலமர்வின் போது வளவாளராகக் கலந்து கொண்ட அஸீஸ் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு நாட்டில் சட்டம் மற்றும் நீதிமன்றங்கள் நிறுவப்பட்டிருப்பது மட்டும் போதுமாகாது. அவைகள் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். எப்போதும் மக்கள் கலாச்சார விழுமியங்கள், பெறுமானங்கள் உலக அடையாளம் என்பவற்றை தனதாக்கி கொள்கின்றார்கள; சிறுவர் உரிமை சாசனம் ஒரு நாட்டின் அரசானது சட்டத்தினுடாகவும், நிர்வாகத்துறை நடவடிக்கைகள் மூலமாகவும் சிறுவர்களை பாதுகாப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய கடமைப்பட்டுள்ளது.
அரசியல் யாப்பிற்கு அமைய, அரச கொள்கை மூலங்கள் மற்றும் அடிப்படை உரிமைகள் என்ற விதப்புரைக்கு அமைய சிறுவர்கள் மற்றும் இளைஞர்களது அபிலாசைகள், தன்னாதிக்கம் தொடர்பாக ஊக்கமளித்தல் வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகின்றது. அரசு உடல், உளரீயான அபிவிருத்தி, ஒழுக்கம், சமயம், சமூக தேவைப்பாடுகள் போன்ற அபிவிருத்தியினை மேம்படுத்துவதுடன, துஷ;பிரயோகம் போன்றவற்றிலிருந்;து அவர்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியமும் உறுதிப்படுத்துகிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு  மன உளைச்சல் பிரதான காரணியாகும். கணிப்பின்படி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டவர்களில் 33 வீதமும் பெண்களும் 25 வீதமும்,  ஆண்களும் இந்த நிலைக்கு உட்படுகின்றார்கள். இது சமூகத்திற்கும்     மற்றும் உடல் உள ரீதியான சுகாதாரத்திற்கும் எவ்வளவு பாரியதொரு பிரச்சினை என்பதை சுட்டிக்காட்டுகின்றது. சிறுவர்களைக் கண்கானித்தல், பாதுகாத்தல், இவர்களது அபிவிருத்தி தொடர்பான இலக்குகளில் உறிய நிறுவனரீதியான ஒழுங்குகள், சட்ட ஏற்பாடுகள் போன்றவை திருப்தியளிக்கக் கூடியவையாகும்.
சர்வதேச ரீதியில் 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட சிறுவர் உரிமை சமவாயம் முதலிடத்தைப் பெறுகிறது. இச்சமவாயத்தில் வாழ்வதற்கான உரிமை, அபிவிருத்திக்கான உரிமை, பாதுகாப்புக்கான உரிமை, பங்குபற்றும் உரிமை என நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டு;ள்ளது.
சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர்; விவகார அமைச்சின் தலைமையின் கீழ் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, பொலிஸ் திணைக்களம், சிறுவர் நன்னடத்தைத் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம் போன்றவைகளுக்கு சிறுவர் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான அறிவுறுத்தல்கள்; வழங்கப்பட்டுள்ளன.
சிறுவர் உரிமைகளை மீறக்கூடிய சிறுவர் துஷ்பிரயோகம் அதனால் அவர்களுக்கும் நாட்டுக்கும் ஏற்படுகின்ற இழப்பு, பாதிப்பு தொடர்பாக அனைவர்களும் மிக உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் உள்ளடங்களாக சிறுவர் துஷ்பிரயோகம் கடல் போன்று விசாலத்தன்மை கொண்டது. இதன் பாரதூரத்தை நாம் நாளாந்தம் கேள்விப்படுகின்ற முறைப்பாடுகளில் இருந்து கண்டுகொள்ளலாம்.
பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் 2010ம் ஆண்டில் 57560 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்;டுள்ளது. அதில் 334 முறைப்பாடுகள் சிறுவர்களைக் கொடுமைப்படுத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாகவும, 47 முறைப்பாடுகள் சிறுவர் வஞ்சக்கடத்தல் தொடர்பாகவும் (வயதெல்லை வரையறுக்கப்படாமல்) 1854 முறைப்பாடுகள் கற்பழிப்பு அல்லது குடும்ப உறுப்பினர்களின் தொடர்பாகவும் காணப்படுகின்றது.
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தின் பிரதிபலனாக தேவையற்ற கருத்தரித்தல்,பாலியல் தொற்று நோய்கள்,  பாலியல் குற்றம்களை செய்வதிலுள்ள ஆர்வம் போன்றவைகளும் நீண்ட காலத்தில் உளரீதியான விரக்தி மனப்பாங்கு, தற்கொலை போன்றவற்றையும் பாலியல் துஷபிரயோகத்துக்குட்பட்ட சிறுவர்களில் வெகுவாகக் கண்டறியப்பட்டுள்ளன என அஸீஸ் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter