உலகின் மிகவும் வயதான நபர் என்ற பெருமையைப் பெற்ற ஜோர்ஜியாவைச் சேர்ந்த அன்டிசா கிவிசாவா தனது 132ஆவது வயதில் உயிரிழந்தார்.
ஜோர்ஜியாவில் சசினோ என்ற மலைக் கிராமத்தில் பிறந்த அன்டிசா, உலகிலேயே வாழ்ந்த மிக வயதான நபர் என்ற பெருமையை பெற்றார். இதன் மூலம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இவரது பெயர் இடம்பெற்றிருந்தது.
இவர் கடந்த 1880ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் திகதி பிறந்த இவர், தனது 42 வயது பேரனுடன் வசித்து வந்தார். அவர் தனது 85 வயது வரை தேயிலைக் கொழுந்து பறிக்கும் வேலை செய்து வந்தார்.
தனது வாழ்நாளில் இவர் 2 உலக போர்களையும், ரஷயப் புரட்சியையும் சந்தித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக