படகு மூலம் ஆஸி செல்ல முற்பட்ட 112பேர் சிலாபத்தில் கைது
சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 112பேரை சிலாபம் கடற்பரப்பில் வைத்து இன்று வியாழக்கிழமை அதிகாலை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் முகத்துவாரம் துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என கடற்படையின் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக