அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 7 அக்டோபர், 2013

மாகாண அமைச்சர் மன்சூரின் நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு உதவிகள் வழங்கும் நிகழ்வு.

மாகாண அமைச்சர் மன்சூரின் நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு உதவிகள் வழங்கும் நிகழ்வு.
           ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

'ஏழைகள் வாழ்வில் ஒளியேற்றுவோம் . அவர் துயர் துடைப்போம்' எனும் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கும், விளையாட்டுக் கழகங்களுக்கும், சமூக சேவை மன்றங்களுக்கும் பல்வேறு உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதாரம் மற்றும் சுதேச வைத்தியம்,சமூக சேவை,விளையாட்டுத் துறை, சிறுவர் நன்நடத்தைப் பராமரிப்பு,கூட்டுறவு அபிவிருத்தி, தகவல் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, பொருட்களை வழங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான யூ.எல்.பசீர் மாஸ்டர், ஏ.எம்.தபீக் , பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு, பொருட்களையும் வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் சுமார் ரூபாய் 20 இலட்சம் பெறுமதியான சூரிய ஒழியில் இயங்கும் உபகரணங்கள், விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டுப் பொருட்கள், பிளாஸ்ரிக் வீட்டுத் தளபாடங்கள், இரும்புக் குழாய்கள், சீமெந்துப் பைகள் எனப் பல்வேறு விதமான பொருட்களும் இலவசமாக வழங்கப்பட்டன.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter