அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 13 மே, 2013

வானியல் கணிப்பை பயன்படுத்தி ரமழான் மாதம் - முஸ்லிம் கவுன்ஸில் தீர்மானம்


வானியல் கணிப்பை பயன்படுத்தி ரமழான் மாதம்

- முஸ்லிம் கவுன்ஸில் தீர்மானம்

Thinakaran

நவீன வானியல் கணிப்பை பயன்படுத்தி புனித ரமழான் மாதத்தை ஆரம்பிக்க பிரான்ஸ் முஸ்லிம் தலைவர்கள் இணக்கம் கண்டுள்ளனர்.  இதன் மூலம் சுமார் 1400 ஆண்டு இஸ்லாமிய சம்பிரதாயத்தை மாற்றி நோன்பு பிடிக்கும் முதல் நாளை தீர்மானிக்க நவீன வானியல் முறை பயன்படுத்தப்பட வுள்ளது.

இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு என பிரான்ஸ் முஸ்லிம் தலைவர்களுள் ஒருவரான அஸ்ஸதின் காசி ராய்ட்டருக்கு குறிப்பிட்டார். ‘தற்போது பிரான்ஸிலிருக்கும் அனைத்து முஸ்லிம்களும் ஒரே நேரத்தில் ரமழானை ஆரம்பிக்க முடியும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு ஆண்டும் ரமழானை ஆரம்பிப்பதில் ஏற்படும் பிரச்சினையை தீர்க்கும் வகையில் பிரான்ஸ் முஸ்லிம் கவுன்சில் கடந்த வியாழக்கிழமை நடத்திய வாக்கெடுப்பில், பிறை பார்ப்பதற்கு நவீன வானியல் கணிப்பை பயன்படுத்த ஆதரவு கிடைத்தது. கடந்த காலங்களில் வெறுங்கண்ணால் பிறை பார்த்தே புனித ரமழான் ஆரம்பிக்கப்பட்டு வந்தது.

சீரற்ற காலநிலைகள் ஏற்படும் பட்சத்தில் சம்பிரதாய முறையை கையாள்வதால் ரமழான் மாதம் ஒருநாள் அல்லது இரு நாட்கள் பிந்தியே ஆரம்பிக்கப்படுகிறது. பழைய முறையை பயன்படுத்துவதால் பிரான்ஸ் முஸ்லிம்கள் தொழில், கல்வி விடயங்களில் சிக்கலை சந்தித்து வருகின்றனர் என பிரான்ஸ் முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் மொஹமட் முஸ்ஸாய் குறிப்பிட்டார். ‘தற்போது எல்லாம் இலகுபடுத்தப் பட்டுள்ளது என அவர் விபரித்தார்.

புதிய முடிவின்படி, நவீன வானியல் கணிப்புக்கு அமைய எதிர்வரும் ஜூலை 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ரமழான் மாதம் ஆரம்பிக்கும் என பிரான்ஸ் முஸ்லிம் கவுன்ஸில் அறிவித்துள்ளது.

இந்த முடிவின் மூலம் முஸ்லிம்களுக்கு விடுமுறை தினத்தைக் கோர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் நவீன வானியலை பயன்படுத்தும் முதல் நாடு பிரான்ஸ் அல்ல. துருக்கி நவீன வானியல் கணிப்பை பயன்படுத்தி ரமழான் மாதத்தை ஆரம்பிக்கும் முறையை ஒரு தசாப்தத்திற்கு முன்னரே ஆரம்பித்தது. அதேபோன்று ஜெர்மனி, பொஸ்னிய முஸ்லிம்களும் இந்த முறையை பயன்படுத்துகின்றனர். எனினும் ரமழான் மாதத்தை ஆரம்பிப்பதில் உள்ள பிறை பார்த்தல் முறை தொடர்பில் உலகில் பெரும்பாலான முஸ்லிம்களிடம் சிக்கல் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Source : Jafna Muslim

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter