அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 6 மே, 2013

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் மிக சிறப்பாக இடம் பெற்றது.


நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் மிக சிறப்பாக இடம் பெற்றது.
         ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
இலங்கையின் இளைஞர் பாராளுமன்றத்திற்கான இரண்டாவது தேர்தல் இன்று (04.05.2013) நிந்தவூர் பிரதேச செயலகத்தில் சம்மாந்துறைப் பொலிசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மிக விறுவிறுப்பாக இடம் பெற்றது.
நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி. றிபா உம்மா ஜலீல், அம்பாரை மாவட்ட பதிவாளர் இஸட்.எம்.நசுறுதீன், கணக்காளர் ஏ.ஆர்.எம்.நிஸாம் ஆகியோரின் கண்காணிப்பின் கீழ் இத்தேர்தல் இடம் பெற்றது குறிப்பிடத் தக்கதாகும்.
இத்தேர்தலில் நிந்தவூர்ப் பிரதேசம் சார்பாக சுலைமான் ஸாபி, மீரான் முகம்மது சாஜித் ஆகிய இரு இளைஞர் வேட்பாளர்களும் களத்தில் குதித்திருந்தனர்.
இவர்களை ஆதரித்து வாக்களிப்பதற்காக இளைஞர்களும், பாடசாலை மாணவர்களும் முண்டியடித்துக் கொண்டு, வாக்களிப்பில் ஈடுபட்டனர்.
பாடசாலை இளைஞர்,யுவதிகளும் ஆட்டோ, வேன் போன்ற வாகனங்களில் அழைத்து வரப்பட்டு, பாராளுமன்றத் தேர்தல் போன்று வாக்களிப்பு இடம் பெற்றதை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் தெரிவிக்கிறார்.
Visual: 2th Youth Parliament Eletion Votting.
ampara rafeek.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter