அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 19 டிசம்பர், 2012

அமெரிக்காவில் மீண்டும் பீதி - பாடசாலைகள் மீது மர்ம மனிதன் தாக்கலாமென பரபரப்பு



அமெரிக்காவின் கனெக்டிக்கட் மாகாணம் நியூடவுண் நகரில் உள்ளது சாண்டி ஹூக் தொடக்க பள்ளி. இங்கு கடந்த 14ம் தேதி காலை 9.30 மணிக்கு பள்ளி ஆசிரியை நான்சியின் 2வது மகன் ஆடம் லான்சா (20) திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினான். இதில் 20 குழந்தைகள், பள்ளி முதல்வர், மனநல பிரிவு ஆசிரியர் உள்பட 28 பேர் பலியாயினர். வீட்டில் அம்மா நான்சியை கொன்று விட்டு பள்ளிக்கு ஆடம் வந்து சரமாரி துப்பாக்கிச் சூடு தானும் தற்கொலை செய்து கொண் டான். 

இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், நியூடவுண் நகரில் இருந்த 32 கி.மீ. தொலைவில் உள்ள ரிட்ஜ்பீல்டு நகரில் உள்ள பள்ளிகளில் மர்ம மனிதன் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தலாம் என்று போலீசுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நகரம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. ரிட்ஜ்பீட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. எல்லா பள்ளிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter