புத்தளம் தப்போவ - பாவட்டாமடு கிராமம் ஊடாக செல்லும் மீ ஓயாவில் மிதந்துக் கொண்டிருந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இச்சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தப்போவையைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயென அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சடலம் குருநாகல் வைத்தியசாலையில வைக்கப்பட்டுள்ளது.
புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(அ- தெ)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக