அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 9 அக்டோபர், 2012

ஓடும் ரயிலில் மோதுண்டு சிலாபத்தில் ஒருவர் தற்கொலை


ஓடும் ரயிலில் மோதுண்டு சிலாபத்தில் ஒருவர் தற்கொலை


சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சவரான மற்றும் பலாபன ரயில் நிலையங்களுக்கு இடையில் மைக்குளம் பிரதேசத்தில் ஓடும் ரயிலில் மோதுண்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கிப் பயணித்த அலுவலக ரயிலில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். 

இச்சம்பவம் நேற்று (08) இரவு 07.45 அளவில் இடம்பெற்றுள்ளது. 

தற்கொலை செய்து கொண்ட 41 வயதுடைய நபரின் சடலம் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

(அத தெரண) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter