மொனராகலை - கல்வல வீதி - ரம்புக்கனை பகுதி வீடொன்றில் நித்திரையில் இருந்த தாய் மற்றும் மகன் மீது இனந்தெரியாத நபர்கள் பொல்லுகள் கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நேற்று (08) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் படுகாயமடைந்த தாய் மற்றும் மகன் ஆகியோர் மொனராகலை வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டனர்.
இதில் 16 வயது மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தாய் தொடர்ந்தும் சிறிபுர வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் தாக்குதல் நடத்தக் காரணம் என்பன இதுவரை வெளியாகவில்லை.
மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(அத தெரண)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக