அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 9 அக்டோபர், 2012

நித்திரையில் இருந்த தாய் - மகன் மீது சாமத்தில் பொல்லடி! மகன் பலி


மொனராகலை - கல்வல வீதி - ரம்புக்கனை பகுதி வீடொன்றில் நித்திரையில் இருந்த தாய் மற்றும் மகன் மீது இனந்தெரியாத நபர்கள் பொல்லுகள் கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். 
நித்திரையில் இருந்த தாய் - மகன் மீது சாமத்தில் பொல்லடி! மகன் பலி
நேற்று (08) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் படுகாயமடைந்த தாய் மற்றும் மகன் ஆகியோர் மொனராகலை வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டனர். 

இதில் 16 வயது மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

தாய் தொடர்ந்தும் சிறிபுர வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 

தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் தாக்குதல் நடத்தக் காரணம் என்பன இதுவரை வெளியாகவில்லை. 

மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

(அத தெரண) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter